ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித அருகதையும் இல்லை-கபே அமைப்பு.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்குரிய மக்கள் பிரதிநிதியை நியமிக்காமை ஜனநாயக விரோத செயலென நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் இருக்கும் உட்பூசல் காரணமாக, பிரதிநிதியொருவரை நியமிக்காமல் இருக்கும் செயற்பாடானது, முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும் எனவும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்தை முன்வைக்கவோ, அது தொடர்பான ஆயத்தங்களில் ஈடுபடவோ ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும்,மக்கள் ஆணையை மதிக்காமல் ஜனநாயகம் தொடர்பான கருத்துகளை ஐக்கிய தேசிய கட்சி முன்வைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளுக்கு அமைய, அந்தக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.