Search
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றினால் 49ஆயிரத்து 44பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவதுநாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால்,11இலட்சத்து 92ஆயிரத்து 013பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 572பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 156பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளஆயிரத்து 185பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
3 views0 comments