- smithjayanth6
நாட்டிற்குள் சட்ட விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கு ஆலோசனை.

நாட்டிற்குள் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களை திருத்தும் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடுவதற்கு விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
10 views