சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் யாரும் இல்லை: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்

இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ரா.சாணக்கியன், நாட்டில் சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகள் எத்தனைபேர் இருக்கின்றனர் என்றுமு;, நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள்இ சிறைக்கைதிகளை விடுவிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடமிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளின் பிரமாணம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் தண்டனைக்கோவைச்சட்டம் அல்லது நாட்டில் செயற்பட்டுவரும் வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகள் அல்லது சிறைக்கைதிகளில் அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்தோடு மாவட்ட மட்டத்தில் இராணுவத்தினருக்கு இருக்கும் காணி அளவு தொடர்பில், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு பதில் வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்க ப்பட்டிருக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.