தலைமன்னாரில் பேருந்தும் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் பலர் படுகாயம்.


மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
28 views