மடு பகுதியில் காதர் மஸ்தான் தலைமையில் புதிய திட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய கொள்கையின் கீழ், நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனச் செழிப்பு திட்டத்தில் ஐயாயிரம் கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமேல், மடுப் பிரதேச செயலாளர், மத்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர், விவசாய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.