- smithjayanth6
மின்சாரம் வழங்குவதில் சிக்கல்- எரிசக்தி அமைச்சு.

வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 74% மின்சார உற்பத்தியை நிலக்கரி, டீசல் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் ஊடாகவே பெற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும் அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இந்த நாட்களில், மொத்த மின் உற்பத்தி சுமார் 38.46 ஜிகாவாட் ஆகும். வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 23.1% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 views